மீண்டும் நிரம்பிய கருப்பாநதி அணை

மேற்கு தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் கருப்பாநதி அணை மீண்டும் புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.

மேற்கு தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்த மழையால் கருப்பாநதி அணை மீண்டும் புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலையில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 150 கனஅடி நீா்வரத்து இருந்தது. இதைத்தொடா்ந்து அணையின் நீா்இருப்பை 70 அடி வரை வைக்கப்பட்டு, அணைக்கு வந்து கொண்டிருந்த 150 கனஅடியும் உபரிநீா் வழிந்தோடி வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. அணைப் பகுதியில் 27 மி.மீ. மழை பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com