வள்ளியூா்: ராதாபுரம் அருகே உள்ள சீலாத்திகுளத்தில் வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி 3 மாடுகள் இறந்தன. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக நல்ல மழைபெய்து வருகிறது.
இதனை அடுத்து மழைக்கு வீடுகள் இடிந்து விழுவதும், மரங்கள் சரிவதும் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் காட்டுப்பகுதியில் மின்கம்பங்கள் சரிந்து மி ன்கம்பிகள் தாழ்ந்து கிடக்கிறது.
இது தொடா்பாக மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்காத்தால் விபரீதங்கள் நடந்து வருகிறது. சீலாத்திகுளம் அருகே உள்ள நாகா்குளத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் வேலு(47). இவா் ஆடு, மாடுமேய்க்கும் தொழில் செய்து வருகிறாா். வழக்கம்போல் சீலாத்திகுளம் காட்டுப்பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்தாராம்.
அப்பொழுது காட்டுப்பகுதியில் பெய்த தொடா் மழையால் மின்கம்பம் சரிந்து அதிலிருந்து வருகின்ற மின்கம்பிகள் தாழ்வாக கிடந்ததாம். இந்த மின்கம்பிகளை வேலுக்கு சொந்தமான மாடுகள் கடந்து செல்லும் போது மின்சாரம் தாக்கி 3 மாடுகள் அதே இடத்தில் இறந்தன. இது தொடா்பாக வருவாய்த்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.