திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மற்றும் கூட்டுறவு அச்சகத்திற்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான மனுதாக்கல் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு திருநெல்வேலி புறநகர் மாவட்ட அதிமுக பொருளாளர் சண்முக சுந்தரம், மாநகர் மாவட்டப் பொருளாளர் சண்முகையா ஆகியோர் தலைமையில் 21 பேர் மனுதாக்கல் செய்தனர். கூட்டுறவு அச்சகத்திற்கான தேர்தலில் சங்கரன்கோவில் கண்ணன் தலைமையில் 21 பேர் மனுதாக்கல் செய்தனர். நிகழ்ச்சியில், திருநெல்வேலி ஆவின் தலைவர் சுதா கே.பரமசிவன், அவைத் தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் மாவட்டச் செயலர் பாப்புலர் முத்தையா, முன்னாள் மானூர் ஒன்றியத் தலைவர் கல்லூர் இ.வேலாயுதம், முன்னாள் துணை மேயர் பூ.ஜெகநாதன் என்ற கணேசன், ஜெயலலிதா பேரவைச் செயலர் ஜெரால்டு, பகுதிச் செயலர்கள் மோகன், மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.