திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயில் திங்கள்கிழமை சுமார் 35 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கொல்லத்தில் இருந்து திருநெல்வேலிக்கு மாலை 4.50 மணிக்கு வரவேண்டிய பயணிகள் ரயில், குவார்டு பெட்டி மாற்றுவதில் ஏற்பட்ட பிரச்னையால் சுமார் 85 நிமிடங்கள் தாமதமாக மாலை 6.15 மணிக்கு வந்தது.
இதனால் திருநெல்வேலியில் இருந்து செங்கோட்டை மாலை 6.25 மணிக்கு புறப்படவேண்டிய பயணிகள் ரயில் சுமார் 35 நிமிடங்கள் தாமதமாக இரவு 7.05-க்கு புறப்பட்டு சென்றது என நிலைய அதிகாரி தெரிவித்தார்.