மகாகவி பாரதியார், இமானுவேல் சேகரன் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி அவர்களுடைய உருவப் படத்துக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பாளையங்கோட்டை மகாராஜநகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருநெல்வேலி மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமை வகித்தார்.
இமானுவேல் சேகரன் பிறந்த நாள், நினைவு நாள் ஆகியவற்றை அரசு விழாவாக எடுக்க வேண்டும், இமானுவேல் சேகரனுக்கு அரசு சார்பில் நெல்லையில் சிலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநகர் மாவட்ட இணைச் செயலர் துரைப்பாண்டியன், நான்குனேரி ஒன்றியச் செயலர் ஜெபா பாண்டியன், பாளையங்கோட்டை பகுதி இளைஞர் அணித் தலைவர் விஜய்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.