கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை பகுதிகளில் சனிக்கிழமை (செப்.14) மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் திருநெல்வேலி நகர்ப்புறம் செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கொக்கிரகுளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 5 மணி வரை திருநெல்வேலி சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், மணிமூர்த்தீஸ் வரம், உடையார்பட்டி, முருகன்குறிச்சி, திருவனந்தபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச்சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், மேலப்பாளையம், நேதாஜிசாலை, குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.