சிவகிரி கடைகளில் பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு

சிவகிரியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என, பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

சிவகிரியில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் உள்ளதா என, பேரூராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் உத்தரவு, திருநெல்வேலி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாஹின் அபுபக்கர் அறிவுறுத்தல் ஆகியவற்றின்பேரில், சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் எம்.எஸ். சுப்பிரமணியன் தலைமையிலான அலுவலர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.வடக்கு ரத வீதி, காந்தி சாலை, ராஜாஜி சாலை, கிழக்கு ரத வீதி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றனவா என அவர்கள் ஆய்வு செய்தனர். சுகாதார ஆய்வாளர் நவராஜ், சுகாதார மேற்பார்வையாளர்கள் சி.த. மாடசாமி, ப. குமார், பணியாளர்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com