நாம் தமிழர் கட்சி சார்பில் சிவந்திபுரத்தில் மதுக் கடைகளுக்கு எதிரான விழிப்புணர்வு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தொகுதிச் செயலர் செல்வம் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்புச் செயலர் பசும்பொன், தென்மண்டல மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் குயிலி நாச்சியார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொகுதிப் பொருளாளர் பெட்ரிக் சார்லஸ், தொகுதி இளைஞர் பாசறை செயலர் சுதாகர் கந்தசாமி ஆகியோர் பேசினர். ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். இதில், மகளிர் பாசறை முத்துலெட்சுமி, துணைத் தலைவர் அபுபக்கர்சித்திக், கல்லிடைக்குறிச்சி பர்னபாஸ், அருள்தாஸ், பீர்முஹம்மது, கோபால், வீரத்தமிழர் முன்னணி தொகுதிச் செயலர் சுப்பையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.