திருநெல்வேலி
வலசை ஊராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
செங்கோட்டை அருகே பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
செங்கோட்டை அருகே பெரிய பிள்ளை வலசை ஊராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
பெரிய பிள்ளை வலசை ஊராட்சிப் பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டில் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அங்குள்ள கடைகளில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்திரராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் தங்கபாண்டி, ஊராட்சிச் செயலர் செல்லப்பா உள்ளிட்டோர் சோதனையிட்டனர். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. கடைகளில் இருந்து 50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடை உரிமையாளர்களிடம் ரூ.6,500 அபராதம் வசூலிக்கப்பட்டது.