சுரண்டை அரசு கல்லூரியில் விழிப்புணர்வு முகாம்

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் போஷன் அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.

சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் போஷன் அபியான் திட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்  நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அணி எண் 201 சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர்(பொறுப்பு) ரா.ஜெயா தலைமை வகித்தார். சேர்ந்தமரம் அரசு மருத்துவமனை மருத்துவர் மதன சுதாகர் போஷன் அபியான் திட்டம்  மற்றும் உணவில் இருக்கும் ஊட்டச்சத்துகள், ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவின் பங்கு, நோய் வராமல் தடுப்பகு முகாமில் வலியுறுத்தப்பட்டது. இதையொட்டி,  போஷன் அபியான் திட்டம் குறித்த கட்டுரை, பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மெர்லின் சீலர்சிங், பேராசிரியர் நாராயணன், திட்ட மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com