அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் வண்ணார்பேட்டையில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டத்தை சீரமைப்புக்குழு பரிந்துரைப்படி தமிழக அரசு பொறுப்பேற்று நடத்த வேண்டும். 47 மாத அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். ஓய்வுக்கால பணப்பலன்களை காலத்தில் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்கச் செயலர் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஏ.இ.முத்து, எஸ்.மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் எல்.குருசாமி, ஓய்வு பெற்றோர் மாநில சம்மேளன துணைத் தலைவர் வை.மணவழகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நீராவி, சரமாரியப்பன், கருப்பசாமி, சங்கலிங்கம், சேது, மோகன், வின்சென்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.