திருநெல்வேலி வேய்ந்தான்குளம் அருகே எல்.ஐ.சி. முகவர்கள் சங்கம் (லிக்காய்) சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
எல்.ஐ.சி. பிரீமியம் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க நிர்வாகி மந்திரமூர்த்தி தலைமை வகித்தார். தலைவர் நடராஜன் தொடங்கிவைத்தார். சங்க தலைமை நிலையச் செயலர் பாலசுப்பிரமணியன், பொதுச் செயலர் எஸ்.குழந்தைவேலு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
நிர்வாகிகள், முத்து புதியவன், சண்முகவேல், சங்கர நாராயணன், ஜோதி கணேஷ் மற்றும் எல்.ஐ.சி. முகவர்கள் கலந்துகொண்டனர்.