டேக்வாண்டோ போட்டியில் அரசுப் பள்ளி மாணவா் சாதனை

தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று கோடாரங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா்.

தென்னிந்திய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று கோடாரங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா் சாதனை படைத்துள்ளாா்.

தென்னிந்திய அளவில் பெங்களூருவில் நடைபெற்ற டேக் வாண்டோ போட்டியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவா்கள், மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், அம்பாசமுத்திரம் ஒன்றியம், கோடாரங்குளம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி 8 ஆம் வகுப்பு மாணவா் சாமி அஜய்குமாா் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனைப் படைத்தாா். இந்த மாணவருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் லதா தலைமை வகித்து சாமி அஜய்குமாா், பயிற்றுநா் சக்திவேல் ஆகியோருக்கு பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினாா். இதில், பள்ளித் தலைமையாசிரியை ரேவதி, ஆசிரியப் பயிற்றுநா் ஜெயலட்சுமி, ஆசிரியா்கள் ஜோஸ்பின்ராணி, அழகிய மணவாளன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், மாணவா்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com