நான்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தார்.
முதல் நாளில் (செப். 23) யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. 2-வது நாளான செவ்வாய்க்கிழமை, தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் சுயேச்சை வேட்பாளர் பத்மராஜன், தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுமத்துல்லா உடனிருந்தார். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த பத்மராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நான் கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் மனு தாக்கல் செய்து வருகிறேன். இது எனது 206-வது மனு தாக்கலாகும். கேரளத்திலும் போட்டியிட இருக்கிறேன் என்றார்.