கபடி போட்டி: ஏஞ்சல் பள்ளி மாணவிகள் சாதனை

சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் வட்டார அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.


சங்கரன்கோவில் அருகே குருவிகுளத்தில் வட்டார அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவர், மாணவிகள் கலந்து கொண்ட விளையாடினர். கபடி போட்டியில் சங்கரன்கோவில் ஏஞ்சல் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். தடகளப் போட்டியில் தனிநபர் பிரிவில் மாணவர் நித்தீஷ்குமார் சாம்பியன் பட்டத்தை வென்றார். பின்னர், நடைபெற்ற நிகழ்ச்சியில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர், மாணவியர்களுக்கு பள்ளியின் தாளாளர் ஜான்சன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். பள்ளி முதல்வர், உடற்கல்விஆசிரியர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com