குற்றாலத்தில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

பாளையங்கோட்டை கிறிஸ்து அரசர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1988-1990 இல் பயின்ற முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்


பாளையங்கோட்டை கிறிஸ்து அரசர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1988-1990 இல் பயின்ற முன்னாள் மாணவர்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் நிகழ்வு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது, மாவட்ட அளவிலான சிறந்த ஆசிரியருக்கான விருது பெற்றோருக்கான பாராட்டு விழா குற்றாலம் நகரிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தமிழக அரசின் 2019 ஆம் ஆண்டு நல்லாசிரியர் விருது பெற்ற தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஸ்பெல்மென், திருச்சி புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மூத்த தமிழாசிரியர் ஜான் ஜோசப், திருவண்ணாமலை மாவட்டம், அல்லிக்கொண்டான்பட்டி ஆசிரியர் சார்லஸ் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
துத்திக்குளம் தலைமையாசிரியர் ஆரோக்கியராஜ், மானூர் பள்ளி ஆசிரியர் ரவி, சென்னை பாடநூல் கழக அலுவலர் அமல்ராஜ், மதுரை எமிஸ்சகாயராஜ், குருவிகுளம் தலைமையாசிரியர் ஐசக், தூத்துக்குடி ஆசிரியர்கள் டேவிட் , மெர்வின், பார்ஜின், திண்டுக்கல் பாண்டியன், காரைக்குடி சகாயராஜ், செங்கோட்டை முருகன், தஞ்சாவூர் ஜேம்ஸ், காஞ்சிபுரம் மைக்கேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஆம்ஸ்ட்ராங், நாஞ்சில் சுதாகர், பாளை ராஜதுரை யாகப்பன், அருளானந்தம், பெலிக்ஸ் ஆகியோர் நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இளையாங்குடி ராபர்ட்ஜெபஸ்தியான் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார். தெற்கு மேடு அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஆல்பர்ட் செல்வின் வரவேற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com