சுரண்டை எஸ்.ஆர். ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளியில் தமிழ் இலக்கிய விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளிச் செயலர் சிவடிப்ஜினிஸ்ராம் தலைமை வகித்தார். முதல்வர் பொன் மனோன்யா முன்னிலை வகித்தார். பள்ளி அறக்கட்டளை நிறுவனர் சிவபபிஷ்ராம் இலக்கிய மன்ற விழாவை தொடங்கி வைத்தார்.
விழாவில், தமிழர்களின் ஐவகை நிலங்கள், தமிழர் விழாக்கள் மற்றும் வாழ்க்கை முறை குறித்த பேச்சு, கட்டுரைப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, மாணவர், மாணவிகளின் கரகாட்டம், கும்மியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், பள்ளித் தலைமை ஆசிரியர் மாரிக்கனி, ஆசிரியர்கள் கோமதி, கலாதேவி, ரகுபதி, ரெதீனா, நிர்மலா, சங்கர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.