நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பது என குலாலர் முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையம் அருகேயுள்ள குறிச்சியில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநில நிர்வாகி முருகன் தலைமை வகித்தார். நிறுவன தலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பது, அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் தீவிர பிரசாரம் செய்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குலாலர் முன்னேற்ற கழக மாவட்டச் செயலர் மாரியப்பன், நிர்வாக உறுப்பினர்கள் கணேசன், சண்முகம், கங்காதரன், பாலசுப்பிரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.