பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த கண்காட்சி நடைபெற்றது.
கீழடியில் ஐந்து கட்டங்களாக நடைபெற்ற அகழ்வாராய்ச்சி குறித்த தகவல்கள், தமிழர்களின் பழம்பெருமை, வேளாண்மை, நெசவு, வணிகம், கல்வி, விளையாட்டு, கட்டடக் கலை போன்றவை குறித்த தகவல்கள், மாதிரி வடிவங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.
கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்-மாணவிகளுக்கு இதுகுறித்து எடுத்து கூறப்பட்டது. இதில் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்கேற்றனர்.