பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
பாளை. ரகுமத் நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீராமகிருஷ்ணன்(48). மருத்துவர் . இவர், அப்பகுதியில் சொந்தமாக கிளினிக் வைத்துள்ளார். இந்த கிளினிக்கில், தச்சநல்லூர் ஆண்டாள்புரத்தைச் சேர்ந்த மாரியப்பன் (56) என்பவரின் மனைவி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களாக மாரியப்பனின் மனைவி பணிக்கு வரவில்லையாம். எனவே மருத்துவர் ஸ்ரீராமகிருஷ்ணன், ஏன் பணிக்கு வரவில்லை எனக் கேட்பதற்காக மாரியப்பனின் மனைவிக்கு போன் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த மாரியப்பன் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர் ஸ்ரீராமகிருஷ்ணன் பாளையங்கோட்டை போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் மாரியப்பனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.