புரட்டாசி 2 ஆவது சனிக்கிழமையையொட்டி திருநெல்வேலியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதன்படி, பாளையங்கோட்டை அருள்மிகு ராஜகோபால சுவாமி கோயில், மீனாட்சிபுரம் தென்திருப்பதி கோயில், திருநெல்வேலி நகரம் கரியமாணிக்கப்பெருமாள் கோயில், திருநெல்வேலி சந்திப்பு வரதராஜபெருமாள் கோயில் ஆகியவற்றில் சிறப்பு திருமஞ்சனங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அபிஷேகம், மலர் அலங்காரம் ஆகியவை நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.