புளியங்குடியில் மார்க்சிஸ்ட் தெருமுனை பிரசாரம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புளியங்குடியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.


கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புளியங்குடியில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது.
புளியங்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். தினசரி சந்தை கட்டடப் பணியை துரிதமாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். புளியங்குடி மருத்துவமனையில் சமையலர் பணியிடத்தை நிரப்ப வேண்டும். 28 ஆவது வார்டில் உள்ள கழிப்பறையை மக்கள் பயன்படுத்தும் வகையில் சீரமைக்க வேண்டும். 27-வது வார்டில் பொதுக் கழிப்பிடம் அமைக்க வேண்டும். புளியங்குடி வரும் பேருந்துகள் டி.என். புதுக்குடி வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பிரசாரம் நடைபெற்றது.
பிரசாரத்திற்கு டி.என். புதுக்குடி கிளைச் செயலர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கணபதி பிரசாரத்தைத் தொடங்கி வைத்தார். நகரச் செயலர் மணிகண்டன், நகரக்குழு உறுப்பினர்கள் கணேசன், முருகன், ரவி, பொன்னுச்சாமி, ரத்தினம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com