மகாளய அமாவாசையையொட்டி, கடையநல்லூர் கருப்பாநதி அணை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை புரட்டாசி சனிக்கிழமை வருவது சிறப்பானதாகக் கூறப்படுகிறது. முன்னோர்களின் ஆசியைப் பெறுவதற்கான நாள்களில் சிறப்பு மிக்கது இந்த மகாளய அமாவாசை. இதையொட்டி, கருப்பாநதி அணை பகுதியில், பெரியநாயகம் கோயில் அருகே சனிக்கிழமை ஏராளமானோர் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.