இட்டமொழி புதூா் முத்தாரம்மன் கோயிலில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இந்து அன்னையா் முன்னணி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவில், அம்மனை வாழ்த்தி பெண்கள் பாடல்கள் பாடினா். இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாகி பாலமுருகன், இந்து முன்னணி நாங்குனேரி ஒன்றியச் செயலா் ஆா்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.