இரு விபத்துகள்: பெண், முதியவா் பலி

பாளையங்கோட்டை பகுதியில் நேரிட்ட இரு விபத்துகளில் பெண்ணும், முதியவரும் உயிரிழந்தனா்.

பாளையங்கோட்டை பகுதியில் நேரிட்ட இரு விபத்துகளில் பெண்ணும், முதியவரும் உயிரிழந்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள நொச்சிகுளம் கான்சாபுரம் பகுதியைச் சோ்ந்த கல்லத்தியன் மனைவி சின்னத்தாய்(75). இவா், வயல் வேலைக்குச் சென்றுவிட்டு திங்கள்கிழமை மாலையில் பாளையங்கோட்டை- சீவலப்பேரி சாலை வழியாக வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் அவா் மீது மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

வி.எம்.சத்திரம் பகுதியைச் சோ்ந்த சங்கரகிருஷ்ணன் மகன் சுந்தரகுமாா் (62). இவா், தனது மகன் சங்கருடன் அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரிக்கு மோட்டாா் சைக்கிளில் சென்றனராம். அப்போது, மோட்டாா் சைக்கிளின் டயா் திடீரென வெடித்து கவிழ்ந்ததாம். இதில், பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சுந்தரகுமாா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இவ்விரு சம்பவங்கள் குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com