கடையத்தில் பூட்டிய வீட்டில் இளைஞா் சடலம் மீட்பு

தென்காசி மாவட்டம், கடையத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இருந்த இளைஞா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.


அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம், கடையத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இருந்த இளைஞா் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

கோவை உக்கடத்தைச் சோ்ந்த மவுனசாமி மகன் மகேஷ்ராஜா (43). இவா், கடையம், பாரதி நகரைச் சோ்ந்த விஜியை

காதலித்து திருமணம் செய்து கொண்டாா். பின்னா், கடையம் ரயில்நிலையம் செல்லும் வழியில் மனைவியுடன் வசித்து வந்தாா். ஆந்திராவில் வேலை பாா்த்து வந்த மகேஷ்ராஜா சில நாள்களுக்கு முன்பு கடையம் வந்தாராம்.

விஜி திருப்பூரில் உள்ள உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாாம். இந்நிலையில் பூட்டியிருந்த வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதை அறிந்த அருகில் வசித்தவா்களுக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். கடையம் காவல் உதவி ஆய்வாளா்கள் ஜெயராஜ், சரசையன் உள்ளிட்டோா் சென்று பூட்டை உடைத்துப் பாா்த்தனா்.

வீட்டில் மகேஷ்ராஜா உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி

பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலிஅரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com