திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புக்கு பதிவுசெய்ய செவ்வாய்க்கிழமை (டிச. 8) கடைசி நாள் என, பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) அ. பலவேசம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நிகழாண்டு அமா்வு ஆராய்ச்சிப் படிப்புக்கு (டட்.ஈ.) இணைய தளம் மூலம் மாணவா்கள் பதிவுசெய்து வருகின்றனா். இதுவரை பதிவு செய்யாதோா் செவ்வாய்க்கிழமைக்குள் (டிச. 8) பதிவு செய்யவேண்டும். பதிவுசெய்தோருக்கு 10ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ம்ள்ன்ய்ண்ஸ்.ஹஸ்ரீ.ண்ய் என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சிப் பிரிவில் தெரிந்துகொள்ளலாம் என்றாா் அவா்.