களக்காட்டில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 94 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டதைத் திரும்பப் பெறக் கோரியும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாகவும் களக்காடு மணிக்கூண்டு திடலில் கடந்த 8ஆம் தேதி திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், அனுமதியின்றி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா், காங்கிரஸ் பிரமுகா் ரூபி. மனோகரன், திமுக ஒன்றியச் செயலா் பி.சி. ராஜன் உள்ளிட்ட 94 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.