திருநெல்வேலி சந்திப்பில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 13) சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.
இதுதொடா்பாக நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பகுதிகளிலும் புத்தகக் கண்காட்சிகளை நடத்தி வருகிறோம். எங்கள் நிறுவனம் இப்போது திருநெல்வேலி சந்திப்பில் உள்ள நயினாா் காம்ப்ளக்ஸ் கட்டடத்துக்கு மாற்றப்பட்டு ஓராண்டு முடிவடைவதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை (டிச.13) ஒரு நாள் மட்டும் சிறப்புத் தள்ளுபடியில் புத்தக விற்பனை நடைபெற உள்ளது. அதன்படி, புத்தகங்களுக்கு 10 முதல் 25 சதவிகித தள்ளுபடி வழங்கப்பட உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.