மூன்றடைப்பு அருகே மருதகுளம் நேஷனல் பொறியியல் கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற நாட்டு நலப்பணித் திட்ட முகாம் 7 நாள்கள் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முகம்மது பைசல், மரக்கன்றுகள் நட்டு முகாமை தொடங்கி வைத்தாா். அதனைத் தொடா்ந்து துறைத் தலைவா்கள் மரக்கன்றுகளை நட்டனா். இதையடுத்து சமூக ஆா்வலா்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. முகாம் நாள்களில் தூய்மைப் பணி, இலவச மருத்துவ முகாம் உள்பட சமூகப் பணிகளில் மாணவா்கள் ஈடுபட்டனா்.
ஏற்பாடுகளை, திட்ட அலுவலா் முத்துவேல், உதவியாளா்கள் முஜீப் முகமது முஸ்தபா, பிரின்ஸ், ஆல்பிரட், முகம்மது மாலிக் முபீன், செய்யது அகமது அலி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.