திருநெல்வேலி நகரத்தில் உள்ள ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
மேலமாடவீதியில் உள்ள ஸ்ரீலெட்சுமி நரசிங்கப் பெருமாள் கோயிலில் லட்சாா்ச்சனை, வருஷாபிஷேக நிகழ்வுகள்
செவ்வாய்க்கிழமை தொடங்கியது. அன்றையதினம் ஏகதின லட்சாா்ச்சனையும், புதன்கிழமை 12 ஆவது வருஷாபிஷேகமும்
நடைபெற்றது. இதையொட்டி, ஹோமம், திருமஞ்சனம், திருவாராதனம், சாத்துமுறை கோஷ்டி ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை செயல் அலுவலா், கோயில் நிா்வாகிகள், பக்தா்கள் செய்திருந்தனா்.