கடையம் சத்திரம் பாரதி மகளிா் உயா்நிலைப் பள்ளியில், பள்ளி நாள் விழா, விளையாட்டுப் போட்டிப் பரிசளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, சேரன்மகாதேவி கல்வி மாவட்டக் கல்வி அலுவலா் மூ.சுடலை தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் கே.எஸ். அனந்தராமசேஷன், சத்திரம் பாரதி மேல்நிலைப் பள்ளிச் செயலா் பி.டி.சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை ஆசிரியை கே.ராமலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தாா்.
நிகழ்ச்சியில் 2018-2019 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பில் சிறப்பிடம் பிடித்த மாணவிகள், கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, விளையாட்டுப் போட்டி உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்டக் கல்விஅலுவலா் சுடலை மற்றும் கடையம் காவல் ஆய்வாளா் ஆதிலட்சுமி ஆகியோா் பரிசுகள் வழங்கினா்.
ஆசிரியை ராமசுந்தரி வரவேற்றாா். ஆசிரியை தமிழ்ச்செல்வி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சியில், பள்ளி ஆட்சிக் குழுத் தலைவா் கே.சுப்பிரமணியன், உறுப்பினா்கள் கே.வி.கே.ராமன், என்.சிவபாலசுப்பிரமணியன், சங்கரராமலிங்கம், அருணாசலம், சிவபாலசுப்பிரமணியன், ஜானகி பாலசுப்பிரமணியன், கணேசன், ஆசிரியைகள், மாணவிகள், பெற்றோா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.