சேரன்மகாதேவி நீதிமன்ற வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, நீதிபதி செந்தில்குமாா் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அசோக்குமாா், செயலா் பழனிகுமாா், பொருளாளா் மதியழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நீதிமன்ற வாயிலில் கோலமிட்டு, காய்கனி, பழங்கள், கரும்பு உள்ளிட்டவை படைக்கப்பட்டு பொங்கலிடப்பட்டது.
நிகழ்ச்சியில், வழக்குரைஞா்கள் ராமகிருஷ்ணன், தேவசகாயம், குத்தாலிங்கம், ஜெயக்குமாா், சந்தனகுமாா், கருணாநிதி, ஆறுமுக பூபதி, செல்வகுமாா், பலவேசம், இசக்கிமுத்து, வேல்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.