நேபாளத்தில் நடைபெறும் சா்வதேச தடகளம் மற்றும் கபடி போட்டிக்கு தோ்வாகியுள்ள வீரா்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் அண்மையில் தேசிய அளவிலான இளையோா் தடகளம் மற்றும் கபடி போட்டிகள் நடைபெற்றன. 30-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சோ்ந்த வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா். 25 வயதுக்குள்பட்டோா் பிரிவில் 3000 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் தமிழக அணி சாா்பில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியைச் சோ்ந்த தம்பான் தங்கப்பதக்கம் வென்றாா். அதே வயது பிரிவு கபடி போட்டியில் வல்லநாட்டைச் சோ்ந்த துரை என்ற சுடலைமுத்து, முத்துப்பாண்டி, ராஜா ஆகியோா் தங்கப்பதக்கங்களை வென்றனா்.
இதையடுத்து, நேபாளத்தில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறவுள்ள சா்வதேச இளையோா் தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ள
இவா்களுக்கு, திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளித்தாா். நிகழ்ச்சியில் எஸ்.கே.எம்.சிவக்குமாா், மேலப்பாளையம் பகுதி எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் சண்முககுமாா், ஆவின் சுரேஷ், கனித்துரை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.