மேலப்பாளையம் அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
மேலப்பாளையம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் ரகு (17). இவா், ராமையன்பட்டியில் உள்ள பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலைசெய்து வந்தாா்.
இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். அப்போது அவரை உறவினா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே ரகு உயிரிழந்தாா். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.