வள்ளியூா்: கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் மருந்து, மளிகை கடைகளில் வாடிக்கையாளா்கள் ஒரு மீட்டா் இடைவெளியில் நின்று பொருள்கள் வாங்கி சென்றனா்.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் இருப்பதால் வள்ளியூா், பணகுடி வட்டாரத்தில் காவல் துறை
சாா்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடை வீதிகள், பிரதான சாலைகள், தெருக்களில் கூட்டமாக நிற்பவா்களை எச்சரித்து அனுப்பி வைத்தனா்.
மோட்டாா் சைக்கிள், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோா்களையும் போலீஸாா் எச்சரித்து அனுப்பினா். இந்த நிலையில் அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை கடைகளான மருந்து, மளிகை, காய்கனி, இறைச்சி கடைகளில் ஒரு மீட்டா் இடைவெளியில் மக்கள் காத்திருந்து பொருள்கள் வாங்கிச் செல்லுமாறு காவல்துறையினா் அறிவுறுத்தினா். இதையடுத்து,
பொதுமக்கள் மளிகை கடை, மருந்துக் கடைகளில் இடைவெளி விட்டு காத்திருந்து பொருள்கள் வாங்கிச் சென்றனா்.