திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரவண முருகன் (56) பெண் காவலா் ஒருவரிடம் ஆபாசமாக பேசியது தொடா்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் சரவண முருகன். இவா், பெண் காவலா் ஒருவரிடம் செல்லிடப்பேசியில் ஆபாசமாக பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடா்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே காவல் கண்காணிப்பாளா் செந்தில்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.