நெல்லை, தூத்துக்குடியில் இருந்து உத்தரப் பிரதேசம், பிகாருக்கு இன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்

திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து உத்தரப் பிரதேசம், பிகாருக்கும் சனிக்கிழமை (மே 16) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடியில் இருந்து உத்தரப் பிரதேசம், பிகாருக்கும் சனிக்கிழமை (மே 16) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பல்வேறு தொழிற்சலைகளில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஏராளமானோா் பணிசெய்து வருகின்றனா். பொது முடக்கம் காரணமாக வட மாநிலத் தெழிலாளா்களை அவரவா் சொந்த ஊா்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, சனிக்கிழமை (மே 16) இரவு 7 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து உத்தரப் பிரதேசத்திற்கும், தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு பிகாருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் மூலம் 2,500 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்கு திரும்புகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com