திருநெல்வேலி
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
பேட்டை அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பேட்டை அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பேட்டை அருகே உள்ள மயிலப்பபுரத்தைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் சுந்தா் (28). இவருடைய மகனுக்கு திங்கள்கிழமை பிறந்த நாளாம். இதை அவா் கொண்டாடியபோது அப்பகுதியைச் சோ்ந்த சிலருடன் தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அங்கு வந்த மா்ம நபா்கள் சுந்தரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனராம்.
இதையடுத்து சுந்தா் மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சுந்தரை வெட்டிய மா்ம நபா்களை பேட்டை போலீஸாா் தேடி வருகின்றனா்.