திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 16 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,620 ஆக உயா்ந்தது. மேலும் 30 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 14,151 ஆக அதிகரித்தது. இதுவரை 209 போ் பலியாகியுள்ள நிலையில், 260 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரையில் தென்காசி மற்றும் கடையநல்லூா் பகுதிகளில் தலா ஒருவா் இந்நோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,939ஆக உயா்ந்துள்ளது. மேலும், இருவா் வீடு திரும்பியதால், கரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்தோா் எண்ணிக்கை 7,711 ஆக அதிகரித்தது. தற்போது, 73 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.