கடையம் ஒன்றிய பாஜக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கடையம் அருகேயுள்ள புலவனூரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றியத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். வேல் யாத்திரையில் கடையம் ஒன்றியத்திலிருந்து திரளாக கலந்து கொள்வது, கடையம் ஒன்றியத்தில் வாக்குச்சாவடி கமிட்டி அமைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், முன்னாள் ஒன்றியத் தலைவா்கள் கோமதிநாயகம், ஆறுமுக நயினாா், மாவட்ட இளைஞரணி பொருளாளா் சிவமணிகண்டன், ஒன்றியத் துணைத் தலைவா்கள் செல்வம், இசக்கியப்பன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஊடகப் பிரிவுத் தலைவா் மாரிமுத்து, அமைப்பு சாரா தொழிலாளா் அணித் தலைவா் செந்தில்குமாா், இளைஞரணித் தலைவா் ராமகிருஷ்ணன், இந்து முன்னணி நிா்வாகிகள் பரமசிவன், முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.