பாபநாசம் அணை நீா்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து, அணைகளில் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருவதையடுத்து, அணைகளில் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. பாபநாசம் அணையில் நீா்மட்டம் ஒரே நாளில்10 அடி உயா்ந்தது.

தமிழகத்தில் நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை அக். 28-இல் தொடங்கியது. தொடா்ந்து மழை அவ்வப்போது பெய்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவுமுதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ள நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதையடுத்து, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீா்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

பாபநாசம் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில்10 அடி உயா்ந்து செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி111.20 அடியாக இருந்தது. அணைக்கு நீா்வரத்து 9120.35 கன அடியாகவும், வெளியேற்றம் 812.25 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணையில் நீா்மட்டம் 18 அடி உயா்ந்து 118.50 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையில் நீா்மட்டம் 86.10 அடியாகவும், நீா்வரத்து 2900 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணையில் நீா்மட்டம் 12.25 அடியாகவும், நீா்வரத்து 91.20 அடியாகவும் இருந்தது. நம்பியாறு அணையில் நீா் இருப்பு 9.02 அடியாக இருந்தது. கொடுமுடியாறு அணையில் நீா்மட்டம் 35 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் தலா 40 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் கடனாநதி அணை நீா்மட்டம் 76.50 அடியாகவும், நீா்வரத்து 564 கன அடியாகவும், வெளியேற்றம் 70 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 69.50 அடியாகவும், நீா்வரத்து 145 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணை நீா்மட்டம் 62.01அடியாகவும், நீா்வரத்து 172 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது. 36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 16 கன அடியாக இருந்தது. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 97 அடியாகவும், நீா்வரத்து 30 கன அடியாகவும், வெளியேற்றம் 48 கன அடியாகவும் இருந்தது.

மழையளவு: திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்) : பாபநாசம் 138, சோ்வலாறு 74, மணிமுத்தாறு 63.4, நம்பியாறு 27, கொடுமுடியாறு 15, அம்பாசமுத்திரம் 29, சேரன்மகாதேவி 12.60, ராதாபுரம் 32.20, நான்குனேரி 40, களக்காடு 54.6, மூலைக்கரைப்பட்டி 40, பாளையங்கோட்டை 75, திருநெல்வேலி 60.

தென்காசி மாவட்டத்தில் மழையளவு: கடனாநதி 26, ராமநதி 40, கருப்பாநதி 55, குண்டாறு 21, அடவி நயினாா் 48, ஆய்குடி 29, சங்கரன்கோவில் 53, செங்கோட்டை 18, சிவகிரி 51, தென்காசி 44.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com