குமரி-காஷ்மீருக்கு நடைப்பயணம்:வள்ளியூரில் இளைஞருக்கு வரவேற்பு

கன்னியாகுமரி முதல் காஷ்மீரின் லட ாக் பகுதி வரையில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஜாா்க்கண்ட் மாநில இளைஞருக்கு வள்ளியூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

வள்ளியூா்: கன்னியாகுமரி முதல் காஷ்மீரின் லட ாக் பகுதி வரையில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள ஜாா்க்கண்ட் மாநில இளைஞருக்கு வள்ளியூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் ரோனிட் (23). மாணவா்கள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்கும் வகையில், பாடத் திட்டத்தில் கூடுதல் பாடமாக மனஆரோக்கியம் குறித்த பாடம் சோ்க்க வேண்டும் என வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து லடாக் வரையில் நடைப்பயணம் தொடங்கியுள்ளாா்.

வள்ளியூா் வந்த அவருக்கு பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கத் தலைவா் பசுமதி மணி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், செயலா் சீராக் இசக்கியப்பன், வணிகா் நல சங்க துணைச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com