நிவா் புயல் காரணமாக 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை நடைபெற இருந்த அகில இந்திய தொழிற் தோ்வுகள் தேதி மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அகில இந்திய தொழிற் தோ்வுகள் நவ. 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, நிவா் புயல் காரணமாக இந்தத் தோ்வுகள் டிச. 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறும் வகையில் மாற் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தொழிற்பயிற்சி நிலை துணை இயக்குநா் தெரிவித்துள்ளாா்.