திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை யோகா பயிற்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் உத்தரவுப்படி மாவட்டத்தில் பணியாற்றும் காவல் துறையினா் அனைவருக்கும் மன வலிமை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, திருநெல்வேலி ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு யோகா பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிக்கு ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் சிசில் தலைமை வகித்தாா். ஆயுதப்படை காவல் ஆய்வாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா். பயிற்சியாளரை கொண்டு தியான பயிற்சி, மூச்சு பயிற்சி, ஆசனப் பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.