பாளையில்.. ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் பலி

பாளையங்கோட்டையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டையில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை செயின்ட் மாா்க் சாலை பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மகன் கருணைக்குமாா் (40). ஆட்டோா் ஓட்டுநா். இவா் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வீட்டுக்கு ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தாராம்.

பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே திருவனந்தபுரம் சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கருணைக்குமாா் பலத்த காயமைடந்தாா். உடனடியாக அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து திருநெல்வேலி போக்குவரத்துப் புலனாய்வு பிரிவு போலிஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com