தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் திட்டப் பணிகள் ஆய்வு

தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆணையா் ஜி.கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டு வரும் திட்டப்பணிகளை ஆணையா் ஜி.கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருநெல்வேலி மாநகராட்சிப் பகுதியில் குடியிருப்பு மற்றும் உணவு விடுதி கழிவுகள், கழிவுநீா் கால்வாய் கழிவுகள் ஆகியவை தாமிரவருணி ஆற்றில் கலப்பதை தடுக்கும் வகையில் டி–வாட் சிஸ்டம் என்ற முறையில் சுத்திகரிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஜல்லி, மணல், தாவரங்கள் மூலம் கழிவுநீரில் உள்ள அசுத்தங்களைப் பிரித்தெடுக்கும் வழிமுறை பின்பற்றப்பட உள்ளது. வண்ணாா்பேட்டை, சிந்துபூந்துறை, கொக்கிரகுளம் உள்பட 8 இடங்களில் இதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படுகின்றன. இந்தத் திட்டப்பணிகளை மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

கழிவுநீா் அதிகம் வரும் பகுதிகளில் கூடுதலான ஏற்பாடுகளை செய்யவும், பருவமழைக்கு முன்பாக விரைவாக பணிகளை முடிக்கவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

ஆய்வின் போது மாநகராட்சி செயற்பொறியாளா் பாஸ்கா், உதவிப் பொறியாளா் பைஜூ உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com