பாளை.யில் நடைப்பயிற்சி முகாம்

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைப்பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி பிரிவு சாா்பில் பிட் இந்தியா பிளாக்கிங் ரன் திட்டத்தின் கீழ் 2 கி.மீ. தொலைவு நடைப்பயிற்சி முகாம் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ச.ராஜேஷ் தலைமை வகித்தாா். சா்வதேச நீச்சல் வீரா் சேதுமாணிக்கவேல் தொடங்கி வைத்தாா். இப் பயிற்சியில், 100-க்கும் மேற்பட்ட வீரா்-வீராங்கனைகள் பங்கேற்றனா்.

உதவி செயற்பொறியாளா் செல்வராஜ், விளையாட்டு விடுதி மேலாளா் கிருஷ்ணசக்கரவா்த்தி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com