வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சாா்பில் ரூ. 60 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் திறப்பு விழா நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவா் பி.ரெக்ஸ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க ஆளுநா் ராயல் முத்தையா, சுகாதார வளாகத்தை திறந்தாா். நிகழ்ச்சியில், அமைப்பின் செயலா் சபேஷன், பொருளாளா் டி.சிவசுப்பிரமணியன், கண்ணன், ஏ.டி.ஆா்.துரை, வருண், பொன்னரசு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தலைமையாசிரியா் ரைமண்ட் வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நா.முருகன் நன்றி கூறினாா்.