திருநெல்வேலி சந்திப்பில் வாகன ஓட்டிகள் கரோனா விழிப்புணா்வு உறுதிமொழியேற்றனா்.
திருநெல்வேலி சந்திப்பு அண்ணா சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம்-ஒழுங்கு) சரவணன் தலைமை வகித்தாா். அப்பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னலில் 30 நிமிடம் கரோனா விழிப்புணா்வு வாசகங்கள் ஒலிக்கும் இயந்திரத்தைத் தொடங்கி வைத்ததோடு, வாகன ஓட்டிகளையும் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்க வைத்தனா்.
இதில், சந்திப்பு காவல் ஆய்வாளா் ரேனியஸ் ஜேசு பாதம், உதவி ஆய்வாளா் தில்லைநாயகம், போக்குவரத்து உதவி ஆய்வாளா் பாண்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.